என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பல் டாக்டர்"
- மருத்துவ படிப்பு முடிக்காமல், இருவரும் மருத்துவம் பார்த்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
- சுசியா கர்ப்பிணிகளுக்கு மருத்துவம் பார்த்ததை ஒப்புக்கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் சின்னக்கரை லட்சுமி நகரில் தனியார் கிளினீக் செயல்பட்டு வந்தது. இங்கு சகோதரிகளான திவ்யா, சுசியா டாக்டர்களாக உள்ளனர். எம்.பி.பி.எஸ்., முடித்த திவ்யா சென்னையில் தங்கியுள்ளார். பல் மருத்துவ படிப்பு (பி.டி.எஸ்.,) முடித்த சுசியா கிளினீக்கில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில் 9 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு மருத்துவம் பார்த்த போது சுசியா மருத்துவத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார். இதையடுத்து கிளினீக்கிற்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும் திவ்யா, சுசியா இருவரும் மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் ஆஜராகினர்.
அப்போது திவ்யா சென்னையில் இருந்து மகப்பேறு மருத்துவம் தொடர்பாக வீடியோ காலில் சுசியாவிடம் பேசி, கர்ப்பிணிகளுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதன் மூலம் சுசியா கர்ப்பிணிகளுக்கு மருத்துவம் பார்த்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து இருவரையும் மருத்துவத்துறை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக திருப்பூர் மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி கூறுகையில், ஒருவர் எம்.பி.பி.எஸ்., மற்றொருவர் பி.டி.எஸ்., படிப்பு முடித்துள்ளனர். மருத்துவ படிப்பு முடிக்காமல், இருவரும் மருத்துவம் பார்த்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். மருத்துவ படிப்பு முடித்ததால் முதல் கட்டமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்